என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அஞ்செட்டி வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
Byமாலை மலர்5 May 2022 8:02 AM GMT (Updated: 5 May 2022 8:02 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே யானை தாக்கியதில் தொழிலாளி காயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது65). கூலி தொழிலாளி, நேற்று காலை விறகு வெட்டுவதற்காக, குந்துக்கோட்டை வன ப்பகுதியில் சென்றார்.
அப்போது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை ராஜகோபாலை தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்து யானை சென்றுவிட்டது. அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற ஜெம்பேரி (45) என்பவர் பார்த்து, அவரை மீட்டு வண்ணாத்தி கிராமத்திற்கு தூக்கி வந்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜ கோபாலை போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அவர் அனுமதி க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X