search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கார்கள் மோதி 2 பேர் படுகாயம்

    கன்னிய கோவிலில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    விக்கிரவாண்டியை  சேர்ந்தவர் ராமு. (வயது 34). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு கடலூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபி (32) என்பவர் பயணம் செய்தார். 

    புதுவை-கடலூர் ரோட்டில் கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் திடீரென ராமு ஓட்டிச் சென்ற கார்மீது மோதியது.

    இதில் ராமு ஓட்டிச் சென்ற காரின் முன் பக்கம் சேதமாகி இடிபாடுகளில் ராமுவும்  கோபியும் சிக்கிக் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

    அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×