என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் காலனியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்ட் காரைகள் உடைந்து மிகவும் பலவீனமடைந்த நிலையில் தண்ணீர் ஒழுகுவதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதுமாக தண்ணீர்ஏற்றினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விடும் என்ற நிலை உள்ளது. இதனால் மின்சாரம் இருக்கும் போது மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.
அவ்வாறு குடிநீர் விநனியோகம் செய்யும் போது மின்சாரம் தடைபட்டால் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க இயலாத அவல நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தவும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






