என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு தலைமை மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

    அரசு தலைமை மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    பெரம்பலூர்:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதன் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுணன் தலைமை வகித்தார், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் கலா, டாக்டர்கள் ராஜா, சிவக்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் , அதனை எவ்வாறு அணைப்பது, நோயாளிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் செயல்முறைகளை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
    Next Story
    ×