என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மைலாப்பூர் கிராமத்தில் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா
Byமாலை மலர்4 May 2022 9:34 AM GMT (Updated: 4 May 2022 9:34 AM GMT)
மைலாப்பூர் கிராமத்தில் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் தேங்காயை உடைத்து சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர்
தங்களது துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர்.
பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை.
இந்நிலையில் இன்று மைலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கோணாங்கண்மாயில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை,கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.
அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் தேங்காயை உடைத்து சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர்
தங்களது துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர்.
பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை.
இந்நிலையில் இன்று மைலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கோணாங்கண்மாயில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை,கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.
அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X