என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஊராட்சி மன்ற புதிய கட்டிட அடிக்கல்நாட்டு விழா

    ஊராட்சி மன்ற கட்டிட அடிக்கல்நாட்டு விழாவை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிட அடிக்கல்நாட்டு விழாவை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    அறந்தாங்கி பகுதியில் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறமடக்கி கிராமத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை  தொடங்கி வைத்தார்.

    விழாவில் அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டாட்சியர் காமராஜ்,ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி மதியழகன்,ஊராட்சி மன்ற தலைவர் ராஜமனோகரிரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×