என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி அணை பூங்காவில் புள்ளிமான் இறந்தது

    கிருஷ்ணகிரி அணை பூங்காவில் 17 வயது புள்ளிமான் இறந்தது
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அணையை பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கானோர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். 

    நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு குவித்த அவர்கள், அணை பூங்காவில் தங்கள் குழந்தைகளை விட்டு விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் அங்குள்ள மான் பூங்காவில் 60 மான்கள் உள்ளன. 

    அதில் 17 வயது மதிக்கத்தக்க ஆண் ஒன்று இறந்து கிடப்பதை, மான்களை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து, அதை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

    மேலும் இது குறித்து தகவல் அறிந்த பூங்கா பராமரிப்பாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர் அங்கு சென்று பிரேத பரிசோதனை செய்து, அதை அந்த பூங்காவின் ஒரு பகுதியில் புதைத்தனர். 

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வயது முதிர்வின் காரணமாக மான் இறந்ததாக தெரிவித்தனர். மான் இறந்து கிடந்ததை பார்த்த சுற்றுலா பயணிகடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×