என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.
    X
    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.

    மாணவர்களிடையே போதை பொருள் புழக்கத்தை அரசு தடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி

    பேச்சாவடி பகுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மாணவர்களிடையே போதை பொருட்களின் புழக்கத்தை அரசு தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பேச்சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

    தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பள்ளிவாசலிலேயே எளிதாக கிடைக்கிறது., இதற்கு காவல்துறையும் உடந்தையாகச் இருக்கி றார்கள். காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழக முதல்வர் இதற்கென தனி கவனம் செலுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவ கல்வி வணிக மையமாவதை தடுக்கும் நோக்கில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் பயிற்சி சென்டர்கள் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மாணவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடத்தி மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இந்த கல்வி ஆண்டிற்குள் 10.5 % சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக இருக்கிறது,

    நெய்வேலி என்.எல்.சி.யில் கடந்த வருட லாபம் மட்டும் 11,000 கோடி என்றும் ஆனால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்திற்கு என்.எல்.சி. நிறுவனம் எதற்கு இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

    பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். அமைச்சர் துரைமுருகனின் வாக்கு பளிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.மதுவிலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் எனவும் அவ்வப்போது கூறினார்.

    தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து மனிதர்கள் தூக்குவதற்கு தடை விதித்தது குறித்து பதிலளிக்கையில் நம் முன்னோர்கள் கடைப்பிடிக்கக் கூடிய சில மரபு வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் இதில் எந்தத் தடையும் யாரும் விதிக்கக் கூடாது என்றும் நமக்கு உரிய சில கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை நாம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்தார்.

    Next Story
    ×