search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.
    X
    தேரோட்டத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.

    மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    புதுநடுவலூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சொறிதல் விழா நடந்தது. இதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி குடி அழைத்தல், 

    காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி முதல் தொடர்ந்து தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். கடந்த 1-ந் தேதி மாவிளக்கு பூஜையும், பால்குடம் எடுத்தல் மற்றும் அபிஷேகமும் நடந்தது. 2ம்தேதி அக்னிமிதித்தல், அலகு குத்துதல், 

    அக்னிசட்டி ஏந்தல் போன்றவையும், இரவு பொங்கல் வைத்து படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 

    இதே போல் எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த 27-ந் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மள் அருள்பாலித்தார். கடந்த 2-ந் தேதி அக்னிசட்டி ஏந்துதல், 

    அலகு குத்துதல் நிகழ்ச்சியும் மற்றும் சிறப்பு பூஜையும் நடந்தது, நேற்று தேரோட்டம் விழா வெகுவிமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.  

    Next Story
    ×