என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு
ஈரோட்டில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது.
குறிப்பாக மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதேநேரம் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த சில வாரமாகவே மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம். நூல் விலை ஏற்றம் காரணமாக வியாபாரம் மந்தமாகவே நடந்தது. கடந்த வாரம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சில்லரை வியாபாரம் சுமாராக நடந்தது.
இந்த வாரம் இன்று ரம்ஜானை ஒட்டி சந்தை கூடியதுஆனால் வழக்கத்துக்கு மாறாக சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இன்று 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடந்தது. ஆனால் அதேநேரம் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் வெறும் 30 சதவீதம் மட்டுமே நடந்தது.
சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைவாய்பாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது என்றனர்.
Next Story






