என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
பவானியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி- சத்தி மெயின் ரோடு திப்பிச்செட்டி ப்பாலையம் அம்மன் கோவில் தோட்டம், பழனிச்சாமி என்பவரின் தோட்டம் அருகில் வாகன விபத்தில் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் வலதுபக்க தலை இடது தோள் பட்டையிலும் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது ஊர் பெயர் விலாசம் தெரியவில்லை, கடந்த 4 நாட்களாக அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் உடலை கைப்பற்றி பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி நபரை பற்றி விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story






