search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொழிலாளி தற்கொலை

    குடிபோதையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    குடிபோதையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அடுத்துள்ள கணபதிபாளையம், வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(36). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

     கடந்த 1ம் தேதி மாலை வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் சேலையால் தூக்கிட்டுக்கொண்டார். 

    இதை கண்ட மனைவி ரம்யா அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மகேஸ்வரன் இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    Next Story
    ×