search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

    பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்சி:

    தா.பேட்டை அருகே பைத்தம்பாறை மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது33) கூலி வேலை செய்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் இறந்தார். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×