என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
தேவகோட்டையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இலங்கை அகதி
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த முகாமைச் சேர்ந்தவர் நிமல் ராஜ் (வயது48). இவரது மனைவி துஷ்யேந்தினி (36). இவர்களுக்கு வினிதா என்ற மகளும், வினித் என்ற மகனும் உள்ளனர்.
வினிதாவுக்கு திருமணமாகி தேவகோட்டை கண்ட தேவி சாலை ராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்துவருகிறார். வினித் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
நிமல்ராஜ் அகதிகள் முகாமிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக மனைவி துஷ்யேந்தினியும் கடையை கவனித்து வந்தார். கணவர் இல்லாத நேரத்தில் துஷ்யேந்தினியே கடையில் வியாபாரம் செய்வார்.
அப்போது கடைக்கு வருபவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார். இதனால் துஷ்யேந்தினியின் நடத்தையில் நிமல்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக கேட்டபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இன்று காலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு தேவகோட்டை ராம்நகரில் உள்ள மகள் வீட்டிற்கு துஷ்யேந்தினி சென்றார். கணவர் நிமல்ராஜும் அங்கு சென்று விட்டார்.
மகள் வீட்டில் வைத்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நிமல் ராஜ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி துஷ்யேந்தினி தலையில் அடித்தார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்து துஷ்யேந்தினியை அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே துஷ்யேந்தினி பரிதாபமாக இறந்தார். துஷ்யேந்தினி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்த துஷ்யேந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து துஷ்யேந்தினியை அடித்துக் கொன்ற கணவர் நிமல்ராஜை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த முகாமைச் சேர்ந்தவர் நிமல் ராஜ் (வயது48). இவரது மனைவி துஷ்யேந்தினி (36). இவர்களுக்கு வினிதா என்ற மகளும், வினித் என்ற மகனும் உள்ளனர்.
வினிதாவுக்கு திருமணமாகி தேவகோட்டை கண்ட தேவி சாலை ராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவருடன் வசித்துவருகிறார். வினித் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
நிமல்ராஜ் அகதிகள் முகாமிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக மனைவி துஷ்யேந்தினியும் கடையை கவனித்து வந்தார். கணவர் இல்லாத நேரத்தில் துஷ்யேந்தினியே கடையில் வியாபாரம் செய்வார்.
அப்போது கடைக்கு வருபவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார். இதனால் துஷ்யேந்தினியின் நடத்தையில் நிமல்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக கேட்டபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இன்று காலையும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு தேவகோட்டை ராம்நகரில் உள்ள மகள் வீட்டிற்கு துஷ்யேந்தினி சென்றார். கணவர் நிமல்ராஜும் அங்கு சென்று விட்டார்.
மகள் வீட்டில் வைத்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நிமல் ராஜ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி துஷ்யேந்தினி தலையில் அடித்தார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்து துஷ்யேந்தினியை அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே துஷ்யேந்தினி பரிதாபமாக இறந்தார். துஷ்யேந்தினி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்த துஷ்யேந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து துஷ்யேந்தினியை அடித்துக் கொன்ற கணவர் நிமல்ராஜை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






