என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேருக்கு நேர் மோதியது.
கிராம உதவியாளர் பலி
விபத்தில் கிராம உதவியாளர் பலியானார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மலைபட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது35). இவர் திருவிருந்தாள்புரம் கிராம நிர்வாக அலுவலகர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் கோட்டூர், பாலவனநத்தம் பகுதியில் சென்ற போது, ராமராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமராஜ் காயமடைந்தார்.
இதுபற்றிமோகன்ராஜ் மனைவி பச்சைக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






