search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கபாண்டியன்  எம்.எல்.ஏ.
    X
    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

    அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும்

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனையை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கும்,  சுகாதாரத்துறை அமைச்சருக்கும், இதற்கு பரிந்துரை செய்த  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருக்கும்,

     தொழில்துறை அமைச்சருக்கும் ராஜபாளையம் தொகுதி மக்கள் சார்பாகவும் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

    மேலும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை  மருத்து வனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட இருப்பதால் இனிவரும் காலங்களில் இருதய அடைப்பு மற்றும்  அவசர மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அல்லது பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை இருக்காது.  

    இதனால் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழை, எளிய பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் உயிர் இழப்புகளும் எதுவும் ஏற்படாது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×