என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    மயங்கி விழுந்து மூதாட்டி பலி

    மயங்கி விழுந்து மூதாட்டி பலி
    திருச்சி:

    ஸ்ரீரங்கம் புஷ்பக் நகர் இரண்டாவது தெரு பாரத் கார்டன் பகுதியை சேர்ந்தவர்  சத்தியநாராயணா .  

    இவரது மனைவி வெங்கடலட்சுமி (வயது 66). ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெங்கடலட்சுமி வீட்டில் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். 

    இதில் காயமடைந்த அவருக்கு மூக்கில் ரத்தம் வழிந்தது. உடனே அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் . 

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×