என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் 106 டிகிரி வெயில்
வேலூரில் 106 டிகிரி வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
வேலுார்:
வேலூர் மாவட் டத்தில் அக்னி தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் சூரியன் அனலை கக்கிக் கொண் டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த ஒரு வாரத்துக்குள் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 104 டிகிரி சுட்டெரித்தது. இதனால், மக்கள் அனலில் தவித்தனர்.
நேற்று அதிகபட்சமாக நேற்று 106.3 டிகிரியாக வெப்ப அளவு பதிவானது. ஒரே நாளில் 2 டிகிரி எகிறி மக்களை பரிதவிக்க வைத்து வருகிறது கோடை வெயில்.
அக்னி மே 4-ந்தேதி தொடங்குகிறது, அதற்கு முன்னதாகவே நாளுக்கு நாள் எகிறும் இந்த வெப்பநிலை உயர்வை எண்ணி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
Next Story