search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆனைமலையில் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை,  
    ஆனைமலை திவான்சா புதூர் புது காலனியை சேர்ந்த வர் நாச்சிமுத்து (வயது 47). கூலி தொழி லாளி. இவரது  மனைவி பாக்கியம் (45).
     
    இந்த நிலையில் நாச்சிமுத்து கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை.இதனால் அவர் மனவேத னையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று  வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் இருந்த அருவாமனையை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டார்.
     
    இதில் ரத்த வெள்ளத்தில் வலியால் அவர் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு நாச்சிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
    போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    ஆனைமலை தாதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன் (36). லாரி டிரைவர். இவரது மனைவி மாலதி. இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. 
    கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி மாலதி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார் .
    இதனால் மனவேதனை அடைந்த ஜெகநாதன் விரக்தியடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×