என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சேகர்பாபு
கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்களும் பங்கு பெறலாம்” என்ற அறிவிப்பு பலகைகள் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்கப்படும்.
பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமணநாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம்.
பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும். இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் கோவில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும். இதனால் 10,000 முதல் திருவிழா காலங்களில் 25,000 மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள் அதற்கு தகுந்தார் போல் அந்தந்த கோவில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இறைவனை தரிசித்து விட்டு வெளியில் வரும் பாதைக்கு அருகில் கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில் முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை பிரசாதம் உண்டு மகிழ்கின்றனர். இத்திட்டம் இன்னும் பல கோவில்களில் விரிவுப்படுத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்களும் பங்கு பெறலாம்” என்ற அறிவிப்பு பலகைகள் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்கப்படும்.
பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமணநாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம்.
பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும். இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் கோவில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும். இதனால் 10,000 முதல் திருவிழா காலங்களில் 25,000 மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள் அதற்கு தகுந்தார் போல் அந்தந்த கோவில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இறைவனை தரிசித்து விட்டு வெளியில் வரும் பாதைக்கு அருகில் கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில் முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை பிரசாதம் உண்டு மகிழ்கின்றனர். இத்திட்டம் இன்னும் பல கோவில்களில் விரிவுப்படுத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story