என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
போச்சம்பள்ளி அருகே வாலிபர் மாயம்
போச்சம்பள்ளி அருகே வேலைக்கு சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரசாந்த் (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மோனிகா என்கிற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மோனிகா போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பிரசாந்தை தேடி வருகின்றனர்.
Next Story






