என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மத்தூர் அருகே வளையல் வியாபாரி வீட்டில் கொள்ளை

    மத்தூர் அருகே வளையல் வியாபாரி வீட்டில் கொள்ளை போனது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது60). இவர் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா.
    இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவி இருவரும் வளையல் வியாபாரத்திற்கு சென்றனர். 

    பின்னர் மாலையில் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு  பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். 

    அங்கு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.  மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×