என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயக்கமடைந்த மாணவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.
உப்பு என நினைத்து மெக்னீசியம்பாஸ்பேட்டை தின்ற 11 மாணவர்கள் வாந்தி-மயக்கம்
காவேரிப்பட்டணம் அருகே உப்பு என நினைத்து ஆய்வகத்தில் இருந்த மெக்னீசியம்பா ஸ்பேட்டை தின்ற, 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ளது மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி. இதில், 941 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 180 பேருக்கு ஒரே நேரத்தில் ஆய்வக தேர்வு நடந்தது. அதற்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும்மெ க்னீசியம் பாஸ்பேட்டை காகிதத்தில் மடித்து ஜன்னல் ஓரம் வைத்துள்ளனர்.
நேற்று காலை, 11 மணியளவில் அந்த வழியாக சென்ற அந்த பள்ளியின் 7 ம்வ குப்பு மாணவர்கள் ஜன்னல் ஓரத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை மிளகாய்தூள் உப்பு கலவை என நினைத்து எடுத்து சென்று, தாங்கள் வைத்திருந்த மாங்காயுடன் சேர்த்து சாப்பிட்டனர்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்துள்ளனர். சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து வாந்தி எடுத்து மயங்கிய, ஏழாம் வகுப்பு மாணவர்கள், 10 பேர் மற்றும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் ஆகிய, 11 பேரை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில்அ னுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்காமல் ஒரே படுக்கையில் 2 முதல் 5 மாணவர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம்அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story