என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் விசாரணை
ஆஸ்பத்திரிக்கு சென்ற தாய்-மகன் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
கடலூர் அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற தாய்-மகன் திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குறிஞ்சி நகர் சேர்ந்தவர் முருகவேல் (வயது 32). அவரது மனைவி செல்வராணி (வயது 28). இவர்களுக்கு வேனிஷ் ( 4) என்கிற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று காலையில் செல்வராணி தனது மகன் வேனிஷை அழைத்துக்கொண்டு வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த முருகவேல் தனது மனைவி மற்றும் மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய்-மகனை தேடி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குறிஞ்சி நகர் சேர்ந்தவர் முருகவேல் (வயது 32). அவரது மனைவி செல்வராணி (வயது 28). இவர்களுக்கு வேனிஷ் ( 4) என்கிற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று காலையில் செல்வராணி தனது மகன் வேனிஷை அழைத்துக்கொண்டு வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த முருகவேல் தனது மனைவி மற்றும் மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய்-மகனை தேடி வருகின்றனர்.
Next Story






