என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் 104 டிகிரி வெயிலால் பொதுமக்கள் அவதி
வேலூரில் 104 டிகிரி வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வேலுார்:
வேலுார் மாவட்டத்தில் வெயில் கொளுத்தத் தொடங்கி பல வாரங்க ளாகி விட்டது.
தொடர்ந்து வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டியது. இத னால், பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப் பக்காற்று வீசுகிறது.
கடந்த 2 நாட்களாக வெயில் 101 டிகிரி அள வுக்கு இருந்தது. அதிகா லையில் மட்டும் லேசான குளிர் காற்று வீசியது. ஆனால், நேற்று வழக்கத் துக்கு மாறாக வெப்பத்தின் அளவு அதிகமாக உணரப் பட்டது.
சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. நெடுஞ்சாலைகளில் வாக னங்களில் செல்லவே முடி யாத அளவுக்கு வெப்பக் காற்று வீசியது.
கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே நடையைக் கட்டினர்.
நேற்று அதிக பட்சமாக வேலுார் மாவட் டத்தில் 104.5 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. வருகிற 4-ந் தேதி வெப்பத்தின் உச்ச பட்சமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
அக்னி தொடங்க 4 நாட் கள் இருக்கும் நிலையி லேயே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பது வேலுார் நகர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Next Story






