என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் சமூக நல்லிணக்க விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    பெரம்பலூரில் சமூக நல்லிணக்க விழா நடந்த போது எடுத்த படம்.

    பெரம்பலூரில் சமூக நல்லிணக்க விழா

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் சமூக நல்லிணக்க விழா நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவ னங்களின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், இது ஒரு மத நல்லிணக்க விழா.

    எவ்வித வேறுபாடும் இல்லாமல் உலகுக்கு ஒற்றுமையை வலியுறுத்து வதற்காக நடத்தப்படும் விழா சமத்துவம்,சமூக நீதி, விடுதலை புரட்சிகரதத்துவங்களை இம்மண்ணில் நிலைநிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.கல்வி நிறுவன செயலா ளர் நீலராஜ் முன்னிலை வகித்தார்.


    விழாவில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மதுமுனீர் ஹஜ்ரத், மாவட்ட அரசு காஜி அப்துல்சலாம்தாவூதி, மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் சுல்தான் இப்ராகீம், லெப்பைக்குடிக்காடு

    மேற்கு மஹல்லம் தலை வர்சுல்தா   ன்மொய்தீன்,சமூக நீதி படைப்பாளர்கள் சங்க மாநில செயலாளர் தாஹீர்பாட்சா. நகராட்சி முன்னாள் துணை தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் பேசினர்.  

    பின்னர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான இஸ்லாமியர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×