என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் பெண் டாக்டர் கூட்டு பலாத்கார வழக்கு மகளிர் விரைவு கோர்ட்டுக்கு மாற்றம்
வேலூர் பெண் டாக்டர் கூட்டு பலாத்கார வழக்கு மகளிர் விரைவு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர்த்து மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி ரவிச்சந்திரன் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்தார்.
அப்போது, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள மீது போலீசார் தாக்கல் செய்துள்ள 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்கள் 4 பேரிடம் வழங்கினர்.
இதன் அடிப்படையில் அவர்கள் தரப்பில் விரைவில் வழக்கறிஞர்கள் ஆஜரா வார்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த வழக்கு கூடுதல் மகிளிர் கோர்ட்டில் இருந்து, மகளிர் விரைவு கோர்ட்டுக்கு மாற்ற பட்டுள்ளது.
Next Story






