என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பட்டமரத்தான் கோவிலில் லட்ச அர்ச்சனை

    பட்டமரத்தான் கோவிலில் லட்ச அர்ச்சனை நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி பட்டமரத்தான் கோவிலில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான்று லட்ச அர்ச்சனை நடைபெறும். நிகழாண்டு லட்ச அர்ச்சனை இன்று அதி காலை 5.00 மணிக்கு பட்டமரத்தான் கோயில் லட்ச அர்ச்சனை தொடங்கியது.

    இதில் பரணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்க முழங்க லட்ச அர்ச்சனை நடைபெற்றது.முன்னதாக பட்டமரத்தான் சாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


    விழாவில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பட்டமரத்தான் சாமியை வழிபட்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் எஸ்.டி.கே.ஆர் குடும்பத்தார்கள்   அன்னதானம் வழங்கினர்.
    Next Story
    ×