என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 நாட்களாக தொடர்ந்து எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது
Byமாலை மலர்29 April 2022 5:40 AM GMT (Updated: 29 April 2022 5:40 AM GMT)
பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர்ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
சென்னை:
பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை தீ பிடித்த லட்சக்ணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால் எரிந்த தீயை விட வெளியேறிய கரும்புகை அதிகம்.
தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 300 பேர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
3 நாட்களுக்குப் பிறகு தீ கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பல அடி ஆழத்துக்கு சென்றுள்ள தீ கங்குகளால் புகை வெளியேறி கொண்டிருக்கிறது.
தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர்ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர் நேரு கூறும்போது, 9வது மண்டலம் முதல் 15வது மண்டலம் வரை சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சிக்கு பிறகு இங்கு கொட்டப்படுகிறது.
இந்த வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடியும் என்றார்.
குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து வெளியேறும் புகையால் சுற்றுப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலருக்கு கண்கள் சிவந்து வீங்கி உள்ளது.
பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை தீ பிடித்த லட்சக்ணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால் எரிந்த தீயை விட வெளியேறிய கரும்புகை அதிகம்.
தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 300 பேர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
3 நாட்களுக்குப் பிறகு தீ கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பல அடி ஆழத்துக்கு சென்றுள்ள தீ கங்குகளால் புகை வெளியேறி கொண்டிருக்கிறது.
தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர்ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர் நேரு கூறும்போது, 9வது மண்டலம் முதல் 15வது மண்டலம் வரை சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சிக்கு பிறகு இங்கு கொட்டப்படுகிறது.
இந்த வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பணிகள் முடியும் என்றார்.
குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து வெளியேறும் புகையால் சுற்றுப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலருக்கு கண்கள் சிவந்து வீங்கி உள்ளது.
இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, தரமணி ஆகிய 4 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X