search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலை அருகே வலியால் துடித்த பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர்

    திருவண்ணாமலை அருகே வலியால் துடித்த பெண்ணிற்கு வீட்டிலேயே 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அடுத்த வேதந்தவாடி கிராமத்தில் இருந்து நேற்று காலை 108 ஆம்புலன்சு கட்டுப்பாட்டு அறைக்கு பிரசவ வலியால் கர்ப்பிணி ஒருவர் துடிப்பதாக  அழைப்பு வந்தது.

    உடனடியாக மங்கலம் பகுதியில் இயங்கும் 108 ஆம்புலன்சுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் பவதாரணி மற்றும் டிைரவர் பிரபாகரன் ஆகியோர் 108 ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

    அங்கு விவசாயி ஏழுமலை என்பவரின் மனைவி அலமேலு (வயது 22) என்பவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் ஏற்ற முயன்றே போது அலமேலுவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் பவதாரணி வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். 

    இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயையும், குழந்தையையும் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளார்.
    Next Story
    ×