என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருவண்ணாமலை துணி வியாபாரி கொலையில் தாய், மகன் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை துணி வியாபாரி கொலையில் தாய், மகன் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பட்டேல் அப்துல்ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமத் (வயது 27), துணி வியாபாரி.
இவர் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இரவு நல்லவன்பாளையத்தில் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை தென்னைமர தெருவை சேர்ந்த முன்னா என்ற சையது முகமது (25) தரப்பினருக்கும், முகமத் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
முகமத் திருவண்ணா மலை அண்ணாநகர் 1-வது தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னா, அவரது தாய் ஷாமா (46), தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), மோசஸ் (40), மிதுலன் (23) ஆகியோர் முகமத்தை வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் முகமத்தை இரும்பு ராடால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முகமத் இறந்தார்.
முகமத் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து முன்னா, அவரது தாய் ஷாமா, மோசஸ், மிதுலன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






