என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    செல்போன் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை

    அந்தியூர் தேர்வீதியில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் தேர்வீதியில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் தேர்வீதி ஜி.எச். கார்னர் பகுதியில் ஆத்தப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் (32) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். 

    நேற்று இரவு  இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில்  இன்று காலை செல்போன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்த சிலர் இத குறித்து தினேசுக்கு தகவல் கொடுத்தனர். 
    அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். 

    அப்போது கடையின் பூட்டை உடைத்து  2 செல்போன்கள் மற்றும் ரு. 10 ஆயிரம்பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ், அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    ஏற்கன வே இந்த பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் ஒரு பயணிகள் ஆட்டோவில் டேப் ரெக்கார்டரும் திருடப்பட்டது. இந்த நிலையில் தற்போது செல்போன் கடையிலும் கொள்ளை போய் இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×