என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சூளகிரி அருகே தவறி விழுந்த தொழிலாளி சாவு

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பீர் பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது42). இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது சோமநாதபுரம் என்ற பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×