என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரியில்ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆ ர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ ங்கதிர்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொரு ளாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    ஆர்ப்பாட்டத்தின் போது, ஊராட்சியில் பணியாற்றிவரும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×