என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போதை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

    டி.என்.பாளையம் பகுதியில் பங்களா புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் பகுதியில் பங்களா புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். 

    அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி    வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 

    இதில் அவர் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (32) என்றும், அவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டி& சத்தியமங்லம் ரோட்டில் போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த  வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. 

    போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (32) என தெரிய வந்தது. இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து போதை பாக்குகள் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி& பவானிசாகர் ரோட்டில் உள்ள 2 ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் அனுமதியில்லாமல் சிலர் மது  குடித்து கொண்டு இரு-ந்தனர். இதையடுத்து மது குடிக்க அனுமதி அளித்ததாக புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (34) மற்றும் தங்கராஜ் (46) ஆகிய 2 பேரை புளியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×