என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி

    நம்பியூர்-சென்னிமலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நம்பியூர்:

    நம்பியூர்-சென்னிமலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அடுத்த கெட்டி செவியூர், கல்லியப்பம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (61). இவர் தனது மகன் கதிரவன், மருமகள் ராஜேஸ்வரி மற்றும் பேரக் குழந்தை களுடன் ஒன்றாக வசித்து வந்தார். ஜெகதீசன், கதிரவன், ராஜேஸ்வரி ஆகியோர் கூலி வேலை பார்த்து வந்தனர். கதிரவ னுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத் தன்று கதிரவன் தனது மகனுடன் சினிமாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். பின்னர் சினிமா முடிந்து அதிகாலை 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதிரவன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் நிறுத்தும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது மூக்கு மற்றும் நெற்றியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் ராஜேஸ்வரி கதிரவனுக்கு முதலுதவி செய்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் காலை கதிரவன் எழுந்து வந்து வாந்தி எடுத்துள்ளார். திடீரென நெஞ்சு வலிப்ப தாகவும் இடது தோள் பட்டை வலிப்பதாகவும் கூறினார்.

    உடனே ராஜேஸ்வரி தைலம் எடுத்து வைத்தார். இதனையடுத்து கதிரவன் மீண்டும் தூங்கி விட்டார். பின்னர் மாலை கதிரவனை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (56). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஈரோடு அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று பொன்ராஜ் துணி துவைத்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டு உரிமையாளர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×