என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.
உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சேவா பாரதி அமைப்பின் சார்பில், உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சேவா பாரதி அமைப்பின் சார்பில், உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் டாக்டர் சண்முகவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக சங்கர சக்தானந்தா சுவாமிஜி, பால தேவா னந்தாபுரி சுவாமிஜி, நிகிலேஷ் அம்ருதா சுவாமிஜி ஆகி யோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
துணைத் தலைவர் பரமானந்தன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் 300-க்கும் மேற் பட்ட பெண்கள் கலந்துகொண்டு, திருவிளக்குகளை ஏற்றி, உலக நலனுக்காக வழிபாடு நடத்தினர்.
Next Story






