என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசிய போது எடுத்த படம்.
    X
    ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மீனாட்சி மகாலில் பா.ம.க ஒருங்கி ணைந்த மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க இளை ஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்பி., பங்கேற்று பேசினார். 
    பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி யளித்தார். அப் போது அவர் கூறிய தாவது:
    தற்போது சட்டமன்ற தேர்தலின் போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட் சிக்கு வந்தால் பழைய ஓய் வூதிய திட்டம் 2004 க்கு பிறகு வந்தவர் களுக்கு அமல் படுத் தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை செயல் படுத்தப் படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை ஆகும். எனவே அதை செயல் படுத்த வேண்டும். இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். 

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம், 2 ஆயிரம் மதுக் கடைகள் என படிப்படியாக குறைத்து, 4 ஆண்டுகளில் முழுமையாக மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்.   
    மேலும், கிருஷ்ணகிரி மா வட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணே கொள் புதூர் திட்டம், படேத லாவ் கால்வாய் திட்டம் செயல் படுத்திட வேண்டும். கிருஷ்ணகிரி , புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பணி கள் கடந்த 10 ஆண்டு களாக ஆமை வேகத்தில் நடக்கிறது. சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை உடன டியாக அமைத்திட வேண்டும். 

    மாவட்ட தலை நகரமான கிருஷ்ணகிரியில் ரெயில் சேவை இல்லை. அதை செயல்படுத்திட வேண் டும். ஆளுநரும், தமிழக அரசு இணைந்து ஒன்றாக செயல் பட்டால் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அது உகந்ததாக இருக்கும். தமிழக அரசு என்பது மக்களின் உணர் வாகும். ஜனநாயக முறைப் படி வாக்களித்து தேர்வு செய்து ஆட்சிக்கு வந்தவர்கள். ஆளுநர் அந்த அரசிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அதே போல அரசும் ஆளுந ருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அப்படி செயல் பட்டால் எந்த பிரச் சினையும் இல்லை. இல்லா விடடால் தமிழகத் திற்கு பாதகமாகவே இருக்கும். 

    ஆளுனர் பல்லைக் கழகங்களின் வேந்தர் ஆவார். அவர் துணை வேந்தர்களை அழைத்து பேசி உள்ளார். தற்போது தமிழக சட்ட சபையில் துணை வேந்தர் களை தமிழக அரசே தேர்ந் தெடுக்க தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த முறை ஏராளமான மாநிலங் களில் நடை முறையில் உள் ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.,  உள்ளிட்டோர் உடனி ருந்தனர். 
    Next Story
    ×