search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
    X
    ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

    மாமல்லபுரம் அருகே கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் 25 ஏக்கர் மீட்பு

    அறக்கட்டளைக்கு சொந்தமான 25 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் கேளிக்கை பூங்கா செயல்பட்டு வந்தது.

    மாமல்லபுரம்:

    மால்லபுரம் அடுத்த பட்டிபுலம், சாலவான்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையோர பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 25 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அந்த பகுதியில் கேளிக்கை பூங்கா செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டிடங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்போரூர் தாசில்தார் முன்னிலையில் பொக்லைன்கள் எந்திரங்களை வைத்து உடைத்து அகற்றி மீட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×