என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை.
    X
    நகை கொள்ளை.

    18 பவுன் நகை கொள்ளை

    திருச்சுழி அருகே 18 பவுன் நகை கொள்ளை போனது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேஉள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது 2 மகன்களின் ஆதார் கார்டுகளை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு திருச்சுழிக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 18 பவுன் நகையை திருடி கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 5லட்சத்து 55 ஆயிரம் ஆகும். வீடு திரும்பிய கற்பக வள்ளி கதவு உடைக்கப்பட்டு நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் அகிலாண்டாள் (வயது 59). சம்பவத்தன்று இவர் சிவகாசிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.  சாட்சியாபுரம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அகிலாண்டாள் அணிந்திருந்த 4Ñ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் திருத் தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×