என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசாரணை
விசாகா கமிட்டி குழு விசாரணை
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாகா கமிட்டி குழு விசாரணை நடத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பக்டராக முத்துபாண்டியன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர்பணியில் இருந்தபோது பெண்போலீசாருக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் முத்து பாண்டியனை காத்திருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். பெண்ஏட்டு மீதான பாலியல் புகார் குறித்து விசாகாகமிட்டி தலைவர் அர்ச்சனா நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.
அப்போது இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியன், பாதிக்கப்பட்ட பெண்போலீஸ் ஏட்டு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். அதன் அறிக்கை விரைவில் டி.ஐ.ஜி.யிடம் வழங்கப்படும் என தெரிகிறது.
Next Story






