என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
இளம்பெண் தற்கொலை
விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டனர்
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பால் பாக்கியலட்சுமி. இவரது மகள் காவியா (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலா மாண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த சில மாதங் களாக இவருக்கு தொடர் வயிற்றுவலி இருந்தது. மருத்துவர்களிடம் காண் பித்தும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காவியா விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார் அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் அழகுவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (27).
கடந்த சில மாதங்களாக அழகுவேல் நந்தினி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனை புவனேஸ்வரி கண்டித்தார். ஆனால் அழகுவேல் அதனை கேட்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த புவனேஸ்வரி சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக அழகு வேல், நந்தினி ஆகிய 2 பேர் மீது பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






