என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடக மது விற்ற வாலிபர் கைது

    கடம்பூர் மலைப்பகுதி அருகே கர்நாடக மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
    ஈரோடு:

    கடம்பூர் மலைப்பகுதி அருகே கர்நாடக மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர் மலைப்பகுதி மக்கம்பாளையம்& செல்லிபாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். 

    அப்போது சட்டவிரோதமாக கர்நாடகா மாநில மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் (42) என தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

     இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்.
    Next Story
    ×