என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி எடுத்த கொலப்பலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.இவரது மகன் சதீஷ (வயது 26). பந்தல் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
சதீஷ் கோபி அடுத்த அரக்கன்-கோட்டை இலூர் பழையய காலனியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சதீஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்த-தாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்-ளார். இதனால் பழனிசாமி தனது மகனுக்கு போனில் அறிவுரை கூறியுள்ளார்.
இந்நி-லையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சதீஷ் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை சதீஷின் பாட்டி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சதீஷ்தூக்குப் போட்டுக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






