என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம் நடைபெற்ற காட்சி
    X
    தேரோட்டம் நடைபெற்ற காட்சி

    வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாக வடகாடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வந்தது.

    அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வடகாடு சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெறும்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×