என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்
பட்டதாரி பெண் மாயம்
விருதுநகர் அருகே பட்டதாரி பெண் மாயமானார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள டி.தொட்டியங்குளத்தை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் ஜெயமீனா(20). எம்.எஸ்.சி. படித்துள்ள இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் கணேசன் இவரதுமகள் கல்பனா (20). இவர்அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் தேடியும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்குபோலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடிவருகிறார்.
Next Story






