என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்தல்காரர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் இன்ஸ்பெக்டர் பெரியசாமி.
    X
    கஞ்சா கடத்தல்காரர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் இன்ஸ்பெக்டர் பெரியசாமி.

    இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்-டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 கிலோ 
    கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

    மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் 
    கைது செய்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருக்கும் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவனான சிலம்பரசன் வீட்டில் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர்களோடு போலீஸ் சீருடையுடன் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்று உள்ளார்.  

    கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய இன்ஸ்பெக்டர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல கஞ்சா கடத்தல் கும்பலோடு சீருடையுடன் பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×