என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    லாரி மோதி முதியவர் சாவு

    கன்னியக்கோவிலில் சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி பலியானார்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவில் கடலூர் -புதுவை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65) இவர் நேற்று முன்தினம் பரிக்கல்பட்டு சொசைட்டியில் பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது முள்ளோடை அருகே கடலூர்-புதுவை சாலையை கடக்கும் போது கடலூரில் இருந்து புதுவை நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×