என் மலர்
உள்ளூர் செய்திகள்

சதீஷ்
காவேரிப்பட்டணத்தில் துணி கடையில் திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் துணிக்கடையில் புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் அடுத்து மில் மேட்டில் துணி கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது மனைவி சத்யா ( வயது 35)
கடந்த 21 ந் தேதி அன்று மாலை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட் டார்.
இந்நிலையில் மறுநாள் அதி காலை 4 மணி அளவில் இவரது கடையின் ஷட்டர் உடைக் கப்பட்டு இருந்ததாக அருகில் இருந்தவர் தகவல் தெரி வித்தனர். உடனடியாக கடையில் சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போய் இருந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் காவேரிப் பட்டணம் சப் இன்ஸ்பெக்டர் அறிவழகன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் போத்தாபுரம் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது சந்தேகத்துக் கிடமான முறை யில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சசீஷ் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் துணி கடையின் ஷட்டரை தான் உடைத்து பணம் திருடியதை ஒப்புக் கொண்டான். இதையடுத்து சதீசை போலீசார் கைது செய்தனர். இவன் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தெரிகிறது.
மேலும் குருபரபள்ளி போலீஸ் நிலையத்தில் சதீஷ் மீது கேமரா திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது திருப்பத்தூர் பகுதியில் குண்டாஸ் வழக்கும் நிலுவை யில் உள்ளதாக தெரிகிறது.
Next Story






