search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்- ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது

    தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமளா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினர் நிந்துமதி திருமலை கலந்து கொண்டார்.

    துணை தலைவர் சத்தியா கோபிநாத் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கமதீர்‌ஷ அன்சார், ராஜா, ராஜி, விஜயபாபு, சந்திர காந்த், விஜயக்குமார், சம்பத் குமார், விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.

    அஞ்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்வி தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.

    திம்மாவரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் அருள் தேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வீராபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் டில்லி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளராக மோகனா ஜீவா கலந்து கொண்டார். ரெட்டிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் சந்தியா செந்தில்குமார், வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் பாலாஜி, ஆப்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் ஆப்பூர் குமாரசாமி, சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் விஜயலட்சுமி துறை பாபு தலைமை தாங்கினர்.

    குன்னவாக்கத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சத்தியா, தென் மேல்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் கோவிந்தராஜ், புலிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் நிர்மலா அசோகன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை, ஒன்றிய குழு உறுப்பினர் அருள் தேவி, துணை தலைவர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×